search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் நுகர்வு"

    • கோடையில் மின் தேவை அதிகரித்த போதும் தட்டுப்பாடு இல்லாமல் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • கோடையில் மின் தேவை அதிகரித்த போதும் தட்டுப்பாடு இல்லாமல் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது. இந்த மாதத்தில் மின் நுகர்வு படிப்படியாக அதிகரித்து வந்தது. பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்ததால் மின் தேவையும் உயர்ந்தது.

    வெப்பத்தை தாங்க முடியாமல் பலர் ஏ.சி.யை பயன்படுத்த தொடங்கி விட்டனர். பல வீடுகளில் கோடை வெயிலை சமாளிக்க இரவில் ஏ.சி.யை தற்போது உபயோகிக்கிறார்கள்.

    இதனால் மின் நுகர்வு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சமாக 19 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி உள்ளது.

    கோடையில் மின் தேவை அதிகரித்த போதும் தட்டுப்பாடு இல்லாமல் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மின் நுகர்வு குறைந்து வருகிறது. இது தவிர கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் மழை பெய்ததால் மின் நுகர்வு குறைந்துள்ளது. 1000 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு குறைந்து இருப்பதாக மின் வாரியம் தெரிவித்து உள்ளது.

    இது குறித்து மின் பகிர்மான உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் மழை பெய்வதால் மின் நுகர்வு உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வருகிறது. தரவு மையங்கள் அதிகரிக்கிறது. ஏப்ரலை விட மே மாதத்தில் மின் நுகர்வு குறைய வாய்ப்பு உள்ளது.

    மே மாதத்தில் கோடை மழை பெய்யும் என்பதால் மின் நுகர்வு அதிகரிக்க வாய்ப்பு இல்லை. தற்போது 18 ஆயிரம் மெகாவாட் மின் தேவை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடை காலம் தொடங்கி விட்டதால் மின்சாதன பொருள்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
    • விவசாய பிரிவுக்கு கூடுதலாக 7.27 மெகாவாட் செலவிடப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். தினமும் மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது.

    இதில், விவசாயத்தின் பங்கு 7,500 மெகாவாட் என்ற அளவாக உள்ளது. இது கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு அதிகரிக்கும், குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்தும் காணப்படும்.

    இந்த நிலையில், இந்த ஆண்டுக்கால கோடை காலம் தொடங்கி விட்டதால் மின்சாதன பொருள்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மேலும், விவசாய பிரிவுக்கு கூடுதலாக 7.27 மெகாவாட் செலவிடப்படுகிறது.

    இத்தகைய காரணங்களால் கடந்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி தினமும் மின் தேவை முதல் முறையாக 17.584 மெகா வாட்டை எட்டியது. இதற்கு முன் கடந்த 29.4.2022-ல் 17,563 மெகாவாட் என்ற சாதனை அளவாக இருந்தது. விவசாயத்துக்கான 18 மணி நேர மின் வினியோகம் மற்றும் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதால் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    இதனால் முன் எப்போதும் இல்லாத அளவாக மார்ச் 15-ந் தேதி மின் நுகர்வு 18,053 மெகாவாட் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.

    பின்னர் ஏப்ரல் 7-ந் தேதி மீண்டும் தினசரி மின் நுகர்வு 18,252 மெகாவாட் அளவும், 18-ந் தேதி 18,882 மெகாவாட் அளவாகவும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.

    இந்த நிலையில் மின்தேவை மேலும் அதிகரித்து தமிழகத்தில் முதல் முறையாக புதன்கிழமை 19,087 மெகாவாட் அளவை (41.82 கோடி யூனிட்) எட்டியிருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    ×