search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினி லாரிகள் பறிமுதல்"

    • எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அரசு இறந்தார்.
    • மினி லாரி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து 2 மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அரசு (வயது 17) ஐடிஐ மாணவர். இவர் கடந்த 22 ஆம் தேதி ஐடிஐ பாலிடெக்னிக் ஆசிரியர் தோட்டத்தில் தேங்காய் பறிக்க அழைத்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அரசு இறந்தார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் அரசிற்கு நீதி வழங்க வேண்டும் என்று ஒன்று திரண்டு பாலிடெக்னிக் முன்பு போராட்டம் நடத்தினர். இதை அறிந்த அதிகாரிகளும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பொது மக்களை கலைந்து போக செய்தனர். இந்நிலையில் போலீசார் பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதாக சுமார் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை விசாரித்து வந்த நிலையில் போராட்டம் நடத்துவதற்காக பொதுமக்களை வாணியம் பாளையத்திலிருந்து 2 மினி லாரிகளில் பண்ருட்டிக்கு அழைத்து வந்த மினி லாரி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து 2 மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. 

    ×