search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினி டெம்போ"

    • மீன்கள் நடுரோட்டில் சிதறின
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மினி டெம்போ தலைகீழாக கவிழ்ந்தது தெரியவந்தது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் இன்று காலை மீன் ஏற்றி வந்த மினி டெம்போ ஒன்று தலைகீழாக கவிழ்ந்து கிடந்தது. ரோட்டில் மீன்களும் சிதறி கிடந்தன.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுபற்றி நெடுஞ்சாலை ரோந்து படை போலீசாருக்கும், இரணியல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் கன்னியாகுமரியில் இருந்து தக்கலை நோக்கி மீன் ஏற்றி வந்தபோது மினி டெம்போவின் முன் டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மினி டெம்போ தலைகீழாக கவிழ்ந்தது தெரியவந்தது.

    மேலும் இந்த விபத்தில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்தது. விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்ததுடன் நடுரோட்டில் கிடந்த மினி டெம்போவை அப்புறப்படுத்தினார்கள்.

    இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி அதிரடி நடவடிக்கை
    • சந்தேகத்திற்கிடமாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர்

    தக்கலை, ஜூலை.18-

    தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் மற்றும் குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஆகியோர் நேற்று மாலை குளச்சல் அக்கரை பள்ளி என்னும் இடத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மீனவர்களின் படகுகளுக்கு பயன் படுத்தப்படும் மானிய விலையிலான வெள்ளை நிற மண்எண்ணை சிக்கியது. 31 கேன்களில் சுமார் 1000 லிட்டர் அளவில் மறைத்து வத்திருந்ததை தொடர்ந்து, அதனை வாகனத்துடன் பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணை குளச்சல் அருகே செயல்படும் அரசு குடோனில் ஒப்படைக்கப் பட்டது.

    இந்த கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் மானிய விலையிலான மண்எணை் ணையை வெளிச் சந்தையில் விற்பனை செய்த பயனாளிகள் யார்? என்பது குறித்தும் தீவிரமாக விசா ரணை செய்யப்பட்டு வருகிறது.

    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கன்னியாகுமரி:

    தூத்துக்குடி மாப் பிள்ளை லுரணி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை இவரது மகன் மாரிமுத்து (வயது 28). இவர் ஆரல்வாய்மொழி பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் உள்ள மினி டெம்போ ஒன்றை ஓட்டி வந்தார்.

    சம்பவத்தன்று மாரிமுத்து மினி டெம்போவை முப்பந்தல் பகுதியில் ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் மினி டெம்போ கவிழ்ந்தது.

    படுகாயம் அடைந்த மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மாரிமுத்துவிற்கு செல்லா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ள னர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் மாரிமுத்துவிற்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் அவர் பலியாகி இருப்பது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×