search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிதிலி புயல்"

    • கடந்த 14-ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக புயலாக வலுப்பெற்றது.
    • வங்காளதேசத்தில் மிதிலி புயல் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    சென்னை:

    வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது. கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக புயலாக வலுப்பெற்று, வங்காளதேசத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்த மிதிலி புயல், சுமார் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று பிற்பகலில் கரையை கடக்கத் தொடங்கிய மிதிலி புயல், 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காளதேசம் அருகே இரவுக்குள் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அப்போது பலத்த காற்று வீசியதுடன் கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. இந்தப் புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து திரிபுரா மற்றும் வங்காளதேசம் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.

    • தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையையொட்டி, வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    வங்கக்கடலில் கடந்த செவ்வாய்க்கிழமை குறைந்த காற்றழுத்தம் தாழ்வு பகுதி உருவானது. அது வலுப்பெற்று வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர்ந்தது.

    நேற்று முன்தினமும், நேற்றும் இந்த குறைந்த காற்றழுத்தம் தொடர்ந்து வலுப்பெற்றதால் புயல் சின்னமாக மாறியது. நேற்று அது ஆந்திர கடலோர பகுதிகளில் நிலைக்கொண்டிருந்தது.

    அந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் நேற்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. விசாகப்பட்டினத்தில் இருந்து சுமாா் 420 கி.மீ. கிழக்கு தென் கிழக்கே நிலைகொண்டிருந்தது.

    அந்த புயல் சின்னம் நேற்று வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்தது. நேற்று இரவு அது ஒடிசா கடல் பக்கம் நிலைக்கொண்டிருந்தது. அந்த புயல் சின்னம் மேலும் வலுப்பெற்று மீண்டும் வடமேற்கு திசைக்கு மாறி செல்லும் என்று வானிலை ஆய்வு நிலையம் கூறி இருந்தது.

    இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு 'மிதிலி' என்று பெயா் சூட்டப்படும். இந்தப் பெயரை மாலத்தீவு பரிந்துரைத்துள்ளது.

    இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகா்ந்து கொண்டிருக்கிறது. நாளை (18-ந் தேதி) அதிகாலை வங்கதேச கடற்கரையையொட்டி நகா்ந்து மோங்லா-கேப்பு பாராவு பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு கணித்துள்ளது.

    இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையையொட்டி, வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 22-ந்தேதி வரை 6 நாட்கள் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    குறிப்பாக, இன்று (17-ந் தேதி) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (19-ந்தேதி) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி 80 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம் 70 மி.மீ., தக்கலை 60 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி 50. மி.மீ. மழை பதிவானது.

    வடமேற்கு, வடகிழக்கு வங்கக்கடல், மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் இன்று (17-ந்தேதி) சூறாவளிக்காற்று மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 14-ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக புயலாக வலுப்பெற்றது.
    • நாளை அதிகாலை வங்கதேசத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது.

    கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக புயலாக வலுப்பெற்றுள்ளது. நாளை அதிகாலையில் வங்கதேசத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தற்போது ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் மிதிலி புயல் நிலை கொண்டுள்ளது. சுமார் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது.

    ×