search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்ச் மாதம் முடிக்க நடவடிக்கை"

    • ஈரோடு மத்திய பஸ் நிலையம் ரூ.44 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
    • மார்ச் மாதம் இறுதிக்குள் விரிவாக்க பணிகள் முழுவதும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் மையப்பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் 1973-ம் ஆண்டு கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

    இந்த பஸ் நிலையத்தில் மினி பஸ்சுக்கு என்று தனி ரேக், ஒவ்வொரு ஊரு வாரியாக தனி ரேக் அமைக்கப்பட்டு இருந்தது. நாச்சியப்பா வீதி, சக்திரோடு, மேட்டூர் ரோடு, அகில் மேடு வீதி என 4 வழிகள் இருந்தன.

    மேலும் கட்டண கழிப்பிடம், கடைகள், வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையம், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி போன்றவை இருந்தன.

    இந்நிலையில் ஈரோடு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.44 கோடி மதிப்பில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

    இதற்காக 100-க்கும் மேற்பட்ட பழைய கடைகள் இடித்து அகற்றப்பட்டன. விரிவாக்க பணிகளில் நவீன கழிப்பிடங்கள், நவீன ஓய்வறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது.

    நாமக்கல் , சேலம் ரேக் இடிக்கப்பட்டு அங்கு புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது பணிகள் 70 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது.

    மார்ச் மாதம் இறுதிக்குள் விரிவாக்க பணிகள் முழுவதும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×