search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதிரி பள்ளி"

    • அரசு மாதிரி பள்ளியில், பிளஸ்-1 சேர்க்கைக்கு தேர்வாகி உள்ள மாணவ, மாணவிய ருக்கான கலந்தாய்வு மற்றும் பள்ளி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
    • தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில், மாவட்ட அரசு மாதிரி பள்ளியில், பிளஸ்-1 சேர்க்கைக்கு தேர்வாகி உள்ள மாணவ, மாணவிய ருக்கான கலந்தாய்வு மற்றும் பள்ளி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்துப் பேசுகையில், ஆர்வமும், திறமையும் உள்ள அரசுப் பள்ளி மாண வர்களின், உயர்கல்விக் கனவுகளை நனவாக்க, தமி ழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    இத்திட்டம், மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும், தலா ஒரு மாதிரிப் பள்ளி உரு வாக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்ப ட்டுள்ளது. அதன் அடிப்ப டையில், நாமக்கல் மாவட்ட அரசு மாதிரி பள்ளி கீரம்பூரில் தொடங்கப்பட உள்ளது. இந்த மாதிரி பள்ளியில், பிளஸ்-1 மாணவ, மாண வியர் சேர்க்கை மற்றும் பள்ளி அறிமுகக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

    நாமக்கல் அடுத்த கீரம்பூரில், உண்டு உறைவிட வசதி யுடன், மாதிரிப்பள்ளி துவங்கப்பட உள்ளது. சிறந்த உயர்கல்வி நிறுவ னங்களில், தொழில்முறை கல்வி பிரிவுகளில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் சேர்ந்து பயிலும் வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் பயிற்சிகள் அளிக்கப்படும்.

    மேலும், அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றியும், மாணவர்க ளின் ஒட்டு மொத்த செயல்தி றனை அடிப்படையாகக் கொண்டும், மாதிரிப் பள்ளி களில் சேர்க்கை நடக்கிறது. இவற்றை, மாணவ, மாண வியர் நல்ல முறை யில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

    கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, சேலம் மண்டல மாதிரி பள்ளிகள் ஒருங்கி ணைப்பாளர் ராஜேந்திரன், ஆசிரி யர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    ×