search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணிக் சஹா"

    • உயர்மட்டக்குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
    • இதில் திரிபுரா முதல் மந்திரியாக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.

    அகர்தலா:

    திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. 32 தொகுதிகளில் பா.ஜ.க.வும், 1 தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.

    இதற்கிடையே, திரிபுரா முதல் மந்திரியான மாணிக் சகா மீண்டும் 2-வது முறையாக முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மற்றொரு பா.ஜ.க. மூத்த தலைவரும் திரிபுரா முன்னாள் முதல் மந்திரியுமான பிப்லோப் குமார் தீப் மீண்டும் முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியானது. இதனால் தேர்தலில் வெற்றிபெற்ற போதும் முதல் மந்திரி யார் என்பதில் திரிபுரா பா.ஜ.க.வில் குழப்பம் நீடித்தது. இதனால் பா.ஜ.க. உயர்மட்டக்குழு தலைவர்கள் திரிபுரா விரைந்தனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. உயர்மட்டக்குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் திரிபுரா முதல் மந்திரியாக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சை குழப்பம் முடிவுக்கு வந்தது.

    இதன்மூலம் திரிபுராவின் முதல் மந்திரியாக 2-வது முறையாக மாணிக் சகா விரைவில் பதவியேற்க உள்ளார். இதைத்தொடர்ந்து ஆளுநரைச் சந்தித்த மாணிக் சகா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    முதல் மந்திரியாக மாணிக் சகா மற்றும் மந்திரிகள் பதவியேற்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×