search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் தவிப்பு"

    • மழை காலம் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
    • மாணவிகள் பள்ளியின் எதிரே உள்ள புளியமரத்தடியில் மழையில் நனைத்தபடியே பஸ்சிற்கு காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பேருந்து நிலையத்தை அகற்றப்பட்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டு தற்போது ரூ. 4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தற்காலிக பேருந்து நிலையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது. அங்கு காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகள் என சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த புதிய பேருந்து நிலையத்தில் கடும் வெயில் காலமாக இருந்தாலும், மழைகாலமாக இருந்தாலும் வயதானோர், குழந்தைகள், தாய்மார்கள் உள்ளிட்டோர் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் அவதிபடுகின்றனர்.

    தற்போது மழை காலம் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனால் சின்னப்பநல்லூர், கூத்தப்பாடி, முதுகம்பட்டி, நாகனூர், ஒகேனக்கல் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் மாணவிகள் பள்ளியின் எதிரே உள்ள புளியமரத்தடியில் மழையில் நனைத்தபடியே பஸ்சிற்கு காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் பள்ளியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வர சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மழையில் நனைந்தபடி நடந்தே வர வேண்டும்.

    பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தால் ஒதுங்கி நிற்க கூட இடம் இல்லை.

    இதனால் அப்பகுதியில் தற்காலிக நிழற்கூடம் அமைக்க தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவர்கள் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும். மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது.
    • வீட்டுக்கு செல்வதற்கு இரவு 7.30 மணி ஆவதால் கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகள் வயல்வெளியை கடந்து தங்கள் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    10-ம் வகுப்பு 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    மாணவர்கள் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும். மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது.

    சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டுக்கு பேருந்து மூலம் செல்லும் மாணவிகள் வீட்டுக்கு செல்ல இரவு 7.30 மணி ஆகிறது.

    இதனால் கிராமப் பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    பொது தேர்வு எழுத உள்ள மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பது பாராட்டுக்குரிய விஷயம் என்றாலும், மாணவிகள் வீட்டுக்கு செல்வதற்கு இரவு 7.30 மணி ஆவதால் கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகள் வயல்வெளியை கடந்து தங்கள் வீட்டுக்கு செல்லும் நிலை உள்ளது.

    மேலும் மாணவிகள் இரவு நேரத்தில் வீட்டுக்கு செல்வது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதாகவும், பள்ளி சிறப்பு வகுப்பை மாலை 5 மணிக்கு முடித்துக் கொண்டு 5 மணிக்கு மாணவிகளை வீட்டிற்கு அனுப்பினால் கூட மாணவிகள் பேருந்தில் பயணித்து 6.30 மணி அளவில் வீட்டுக்கு வந்து சேர்வார்கள் என்றும் இதற்கு மாவட்ட நிர்வாகமும், பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.

    • கொல்லிமலையில், செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய பகுதியில், அரசுக்கு சொந்தமான 3 டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது.
    • இரவு, பகல் என 24 மணி நேரமும், சந்துக்கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய பகுதியில், அரசுக்கு சொந்தமான 3 டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. ஆனால், இங்குள்ள 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து நாட்களிலும், இரவு, பகல் என 24 மணி நேரமும், சந்துக்கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த சந்துக் கடைகளால், மலைவாழ் மக்கள் பலரும் பல்வேறு இன்னல்க–ளுக்கு ஆளா–கின்றனர். குறிப்பாக, பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவியர் செல்லும் வழியில், சந்துக்–கடைகள் செயல்படுவதால், அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என புகார் எழுந்துள்ளது. அதனால் சந்துக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, கொல்லி–மலை ஒன்றியம், தேவனூர்–நாடு பஞ்சாயத்து பகுதி மக்கள் கலெக்டர் அலுவ–லகத்தில் மனு கொடுத்தனர்.

    இது குறித்து, மலைவாழ் மக்கள் சிலர் கூறியதாவது:-

    தேவனூர்நாடு பஞ்சா–யத்து பின்னம்பட்டியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்குள்ள வெண்டலபாடி பஸ் ஸ்டாப்பில், சந்துக்கடையில் அமோகமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. அங்கு, மதுபிரியர்கள் குடித்து விட்டு, அவ்வழியாக செல்பவர்களை தகாத வார்த்தையால் திட்டுகின்றனர்.

    மேலும், மது போதையில் அரை நிர்வாணத்தில் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றனர். அதனால், அவ்வழியாக பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் செல்வதற்கு அச்சப்ப–டுகின்றனர். எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இது குறித்து, பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள், மாணவியர் நலனை கருத்தில் கொண்டு, சந்துக்கடைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×