என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவி தஞ்சம்"
- 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தேவாங்கமங்கலத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 19). இவர் ஜெயங்கொண்டானில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
உமாமகேஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்த ஜே.சி.பி. ஆபரேட்டர் கார்த்திக் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் கார்த்திக்கின் வீட்டிற்கு தெரிய வரவே 2 பேரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து கார்த்திக் தனது காதலியிடம் தெரிவித்தார்.
2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த 23-ந்தேதி வீட்டில் இருந்து வெளியேறி கோவைக்கு வந்தனர். பின்னர் மருதமலை கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.
இந்தநிலையில் தங்களது மகள் மாயமானது குறித்து உமா மகேஸ்வரியின் பெற்றோர் பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்த மாணவி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தனது காதலனுடன் தஞ்சம் அடைந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்