search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் வழிபாடு"

    • ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் மாணவர்கள் வழிபாடு நடத்தினர்.
    • அரசுப் பொதுத்தேர்வை நல்ல முறையில் எழுதி சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ராமநாதபுரம்

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் அரசுப் பொதுத் தேர்வை நல்ல முறையில் எழுதி சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற சிறப்பு பூஜைகள் நடந்தன.

    தலைமை குருக்கள் மோகன் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். இந்த பூஜையில் ராமநாதபுரம், ரகுநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகள் ஆலயத்தின் தலைமை குருக்கள் மோகன் ஆலோசனையில் வல்லபை அய்யப்பன் கோவில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்தனர்.

    ×