search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் முதலிடம்"

    • ஏலகிரி அரசு பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.

    இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 15 பள்ளிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் தொப்பூர் அரசு பள்ளி 4-வது இடத்தையும், கடத்தூர் அரசு பள்ளி 3-ம் இடத்தையும், சீந்தல்பாடி அரசு பள்ளி 2-ம் இடத்தையும், ஏலகிரி அரசு பள்ளி மாணவர்கள் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர். இது தவிர 4 சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். மேலும் சிறந்த வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் கைப்பந்து கழக சேர்மன் பூக்கடை ரவி, நிர்வாகிகள் இளவரசன், டி.ஜி. மணி, மணிவண்ணன், செயலாளர் தங்கராஜ், இணை செயலாளர் நிர்மல் குமார், பயிற்சியாளர்கள் மாது வணங்காமுடி, ஜெயபால், ஜீவா, சசிகுமார், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் நகர்ப்புற மைய குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
    • இந்த போட்டிகளில் வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் நகர்ப்புற (பி) மைய குறு வட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கடந்த மாத இறுதியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்றது. கபடி போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் பிரிவில் வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

    பூப்பந்து போட்டியில் இளையோர் பிரிவில் 2-ம் இடமும், மேல் மூத்தோர் பிரிவில் முதலிடமும், இறகுப்பந்து போட்டியில் மூத்தோர் தனி நபர் பிரிவில் 2-ம் இடமும், மூத்தோர் இரட்டையர் பிரிவில் 2-ம் இடமும், மேல் மூத்தோர் தனி பிரிவில் 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர்.

    இப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவர் கவுதம், கின்னஸ் சாதனை சிலம்பம் போட்டியில் பங்கேற்றார். மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் பொதுப்பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

    பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்களும் பாராட்டினர்.

    ×