search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் சேர்க்கைக்கான"

    • மொடக்குறிச்சி கலை அறிவியியல் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.
    • மாணவர்களின் கலந்தாய்வு விவரங்கள் கல்லூரி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கனகமலையில் உள்ள மொடக்குறிச்சி கலை அறிவியியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 19-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    பி.எஸ்.சி. கணினி அறிவியல், கணிதம், விலங்கியல், வணிகவியல், பி.காம். சி.ஏ., வணிகவியல் பயன்பாடு, பி.பி.ஏ. சி.ஏ., வணிக நிர்வாகவியல் கணினி பயன்பாடு, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 8 பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

    இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் நேரிடையாக விண்ணப்பங்கள் பெற்று காலியான இடங்க ளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேரலாம்.

    கலந்தாய்வுக்கு வரும் மாணவ- மாணவிகள் 19-ந் தேதி காலை 10 மணிக்கு இணைய விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் நகல், சாதி சான்றிதழ், 2 பாஸ்போஸ்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை ஆகியவற்றின அசல், நகல் மற்றும் படிவம், கல்லூரி கட்டணத்துடன் பெற்றோருடன் வர வேண்டும்.

    மாணவர்களின் கலந்தாய்வு விவரங்கள் கல்லூரி இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் 2-ம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வரும் 19-ந் தேதி கல்லூரி திறக்கும் நாள் என கல்லூரி முதல்வர் ஜெ.எபெனேசர் தெவித்துள்ளார்.

    ×