என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவன் தற்கொலை முயற்சி"
- ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவனை ஆசிரியர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- மாணவனின் தற்கொலை முயற்சி குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை நீலாம்பூர் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் 12 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்ததும் நண்பர்களுடன் வளாகத்தில் விளையாடிக் கொண்டு இருந்தார்.
அப்போது மாணவன் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் ஜடையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி ஆசிரியையிடம் கூறினார். ஆசிரியை மாணவனை அழைத்து கண்டித்தார். பின்னர் இது குறித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் பயந்த மாணவன் பள்ளியில் உள்ள 2-வது மாடிக்கு சென்றார். அங்கு இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவனை ஆசிரியர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு மாணவனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்