என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மழைநீர் புகுந்ததால் தொற்றுநோய் அபாயம்"
- கடந்த 4 தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டையில் பரவ லாக பலத்த மழை பெய்தது.
- மழைநீர் அரசு மேல்நிலை ப்பள்ளி மைதானத்தில் தெப்பம் போல் தேங்கியுள்ள தால் துர்நாற்றம் வீசுகிறது.
நிலக்கோட்டை:
இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டையில் பரவ லாக பலத்த மழை பெய்தது. இந்த மழைநீர் நிலக்கோட்டை மினி பஸ் நிலையத்திலிருந்து பஸ் நிலையம் வழியாக அக்ரகாரப் பட்டி சாலையை கடந்து கே.குரும்பபட்டி கண்மாயில் சேருவது வழக்கம்.
அவ்வாறு மழைநீர் செல்லும் வழியில் நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக அமைக்கப்பட்ட பாலம் பழுதடைந்து மழைநீர் செல்ல வழி யில்லாத காரணத்தால் மழைநீர் அரசு மேல்நிலை ப்பள்ளி மைதானத்தில் புகுந்தது. அந்த மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்று பள்ளியில் தெப்பம் போல் தேங்கியுள்ள தால் துர்நாற்றம் வீசுகிறது.
இதன் காரணமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் விளையாடும் வீரர்களுக்கும் பொது மக்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
எனவே உடனடியாக சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டுமென்று இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதனை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் எனவும் பள்ளி மாணவ-மாணவி களும், பெற்றோர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்