search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Risk of infection"

    • வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என தொற்று நோய் நிபுணர் எச்சரித்து உள்ளார்.
    • ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாக கண்டறிப்பட்டு உள்ளது.

    பீஜிங்:

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்தது. தொடர்ந்து அந்த கொரோனா அரக்கன் உருமாறி பொதுமக்களை பாடாய் படுத்தியது.

    இந்த தொற்றில் இருந்து உலக நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு தற்போது தான் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. இருந்த போதிலும் கொரோனா முழுமையாக நம்மை விட்டு அகலவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் சீனாவை அச்சுறுத்தும் வகையில் கொரோனா போன்ற கொடூர தொற்று நோய் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார். வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என அவர் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தலைமையிலான தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாகவும், இதில் பாதிக்கு மேல் மிகவும் ஆபத்தானது எனவும் கண்டறிப்பட்டு உள்ளது.

    இந்த தொற்றில் 3 வகை மீண்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் கொரோனா போன்ற தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் சில தொற்று நோய் நிபுணர்கள் இதை மறுத்து உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் வைரஸ் பரவும் என்பதை ஏற்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வே எதிர்காலத்தில் இது போன்ற வைரஸ் பரவலை தடுத்து விடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    • கடந்த 4 தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டையில் பரவ லாக பலத்த மழை பெய்தது.
    • மழைநீர் அரசு மேல்நிலை ப்பள்ளி மைதானத்தில் தெப்பம் போல் தேங்கியுள்ள தால் துர்நாற்றம் வீசுகிறது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே அக்ரகாரப்பட்டி சாலையில் அரசு மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் நிலக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டையில் பரவ லாக பலத்த மழை பெய்தது. இந்த மழைநீர் நிலக்கோட்டை மினி பஸ் நிலையத்திலிருந்து பஸ் நிலையம் வழியாக அக்ரகாரப் பட்டி சாலையை கடந்து கே.குரும்பபட்டி கண்மாயில் சேருவது வழக்கம்.

    அவ்வாறு மழைநீர் செல்லும் வழியில் நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக அமைக்கப்பட்ட பாலம் பழுதடைந்து மழைநீர் செல்ல வழி யில்லாத காரணத்தால் மழைநீர் அரசு மேல்நிலை ப்பள்ளி மைதானத்தில் புகுந்தது. அந்த மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்று பள்ளியில் தெப்பம் போல் தேங்கியுள்ள தால் துர்நாற்றம் வீசுகிறது.

    இதன் காரணமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் விளையாடும் வீரர்களுக்கும் பொது மக்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

    எனவே உடனடியாக சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டுமென்று இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதனை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் எனவும் பள்ளி மாணவ-மாணவி களும், பெற்றோர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிரமதேசம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வடிகாலை அமைத்து கொடுத்தால் மட்டுமே இந்த கழிவுநீர் தடையின்றி செல்லும் சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • உடனடி தீர்வு செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர், ஆக.21-

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த செம்பளிச்சாம் பாளையம் காலனி பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    ஒட்ட பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதியதாக கழிவு நீர் வடிகால் அமைக்கப்பட்டது. கழிவுநீர் வடிகால் ஊரின் எல்லை பகுதிவரை மட்டும் கட்டி நிறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் பிரமதேசம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வடிகாலை அமைத்து கொடுத்தால் மட்டுமே இந்த கழிவுநீர் தடையின்றி செல்லும் சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அந்தப் பகுதியில் குடியிருக்கும் குடும்பத்தினர் துர்நாற்றத்தினாலும், கழிவுநீர் தேங்குவதால் கொசு மற்றும் குடிநீர் குழாயில் இந்த கழிவு நீர் கலந்து வருவதால் அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் காய்ச்சல் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் அந்த சாலையின் வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த துர்நாற்றத்தை தாங்க முடியாமல் முகம் சுழித்து செல்லும் நிகழ்வும் தினமும்அரங்கேரி வருகின்றது.

    மேலும் காலனியில் உள்பகுதியில் உள்ள 160 குடும்பங்களுக்கு கடந்த 4 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இதனால் அங்கிருந்து அம்மனம் பாளையம் என்ற பகுதிக்கு 2 கிலோமீட்டர் தூரம் சென்று தான் குடிநீர் எடுத்து வருவதாகவும் இதற்கு உடனடி தீர்வு செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×