search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மளிகை கடை திருட்டு"

    பொள்ளாச்சியில் நேற்று இரவு மளிகை கடை சுவற்றை துளையிட்டு ரூ.5.35 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் நந்தகுமார் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ஜெயக்குமார் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். 

    இந்நிலையில் கடையின் மேலாளர் நேற்று மதியம் 2 மணிக்கு ரூ 5.35 லட்சத்தை இரும்பு பெட்டியில் வைத்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று காலை கடைக்கு வந்து பார்த்த போது , கடையின் பின்புற சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள் இரும்பு பெட்டியில் வைத்திருந்த ரூ. 5.35 லட்சத்தை திருடியிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த மேற்கு போலீசார் சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

    மேலும் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணாமூர்த்தி உத்தரவின் பேரில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சின்னகாமனன், காவலர் சந்திரன் தனிப்படை அமைத்து கடையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×