search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலர் அலங்காரம்"

    • புதன்கிழமை மாலை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி யும் நடந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டா னேஸ்வரர் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு திரியோதசி தினத் தில் பிரதோஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம். வைகாசி மாதம் முதல் திரியோதசி தினமான நேற்று புதன்கிழமை மாலை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை களை தொடர்ந்து மகாதீபாராதனையும் பின்னர் நந்திதேவரின் இரு கொம்பு களுக்கு இடையே சிவனின் நடனக்காட்சி காணும் ஐதீக நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6 மணிக்கு பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்த ருளி பிரகார வலம்வரும் நிகழ்ச்சியும் அருள்பிர சாதம் வழங்கும் நிகழ்ச்சி யும் நடந்தது.

    • மாரியம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த ஆலங்குடி கிராமத்தில் அமைந்துள்ள செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 8-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது மாரியம்மன் மணிமண்டபத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனை தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒருவர் பின் ஒருவராக பக்தி பரவசத்துடன் தீ மிதித்த தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொண்டனர். அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×