search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்துகடை ஊழியர்"

    • விருதுநகர் அருகே மருந்துகடை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் தலைபாண்டி (வயது 27). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு மருந்து கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது பெற்றோரை தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த தலைபாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி அவரது சகோதரர் முத்துப்பாண்டி திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×