என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மருந்தகம்"
- கடையில் இருந்த ஏராளமான மருந்து பொருட்கள் எரிந்து நாசமானது.
- மின்கசிவு காரணமாக இந்த தீவித்து ஏற்பட்டதாக தெரிகிறது.
சோழிங்கநல்லூர்:
சோழிங்கநல்லூர், பொன்னியம்மன் கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவர், ஓ.எம்.ஆர்.ராஜீவ் காந்தி சாலை, எம்.ஜி.ஆர். தெரு சந்திப்பில் மருந்தகம் நடத்தி வருகிறார்.
வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் மருந்தகத்தை பூட்டிச்சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மருந்தகத்தின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தமிழ்ச்செல்வனுக்கும் துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த ஏராளமான மருந்து பொருட்கள் எரிந்து நாசமானது. சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான மருந்துகள் சேதம் அடைந்ததாக தெரிகிறது.
மின்கசிவு காரணமாக இந்த தீவித்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாவட்டத்தில், 1,500க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் உள்ள நிலையில் 3 ஆய்வாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்
- ஆய்வாளர்கள் எண்ணிக்கை குறைவால் ஆய்வு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.
திருப்பூர்:
தமிழகத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறை 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு மருந்துக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர், முதுநிலை மருந்தக ஆய்வாளர், மருந்தக ஆய்வாளர் என பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டுத்துறை தொடர்பான பிரச்னைகளை கண்டறியும் பொருட்டு மத்திய அரசு 2003ல் புதிய கமிட்டி ஒன்றை நியமித்தது.அந்த கமிட்டி பல்வேறு மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு 200 மருந்துக்கடைகளுக்கு ஒரு மருந்தக ஆய்வாளர் எனும் விகிதத்தை கடைபிடிக்க அறிவுறுத்தியது.
அந்த நிலையே தற்போது வரை நீடிக்கிறது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில், 1,500க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் உள்ள நிலையில் 3 ஆய்வாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.அவர்களுக்கு தனியே அலுவலகம் கிடையாது. மருந்துகள் துறை தொடர்பான கோர்ட்டு, வழக்கு விசாரணைக்கு விளக்கம் அளிக்க ஆய்வாளர்களே சென்னை செல்ல வேண்டியுள்ளது. குறைந்தது 6 முதல் 8 ஆய்வாளர் பணியில் இருந்தால் அவ்வப்போது மருந்தகங்களில் தேவையான சோதனை மேற்கொள்ள முடியும்.
ஆய்வாளர்கள் எண்ணிக்கை குறைவால் ஆய்வு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே முறையற்ற மற்றும் தடை செய்யப்பட்ட மருந்து விற்பனையைக் கண்டறிந்து தடுக்க போதிய எண்ணிக்கையில், மருந்தக ஆய்வாளர்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்