search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dispensary"

    • கடையில் இருந்த ஏராளமான மருந்து பொருட்கள் எரிந்து நாசமானது.
    • மின்கசிவு காரணமாக இந்த தீவித்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர், பொன்னியம்மன் கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவர், ஓ.எம்.ஆர்.ராஜீவ் காந்தி சாலை, எம்.ஜி.ஆர். தெரு சந்திப்பில் மருந்தகம் நடத்தி வருகிறார்.

    வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் மருந்தகத்தை பூட்டிச்சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மருந்தகத்தின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தமிழ்ச்செல்வனுக்கும் துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த ஏராளமான மருந்து பொருட்கள் எரிந்து நாசமானது. சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான மருந்துகள் சேதம் அடைந்ததாக தெரிகிறது.

    மின்கசிவு காரணமாக இந்த தீவித்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெரும்பத்தூர் கால்நடை மருந்தக கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது.
    • விழாவில் சதன்திருமலைகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், மணலூர் ஊராட்சியில், மணலூர் கிராமத்தில், பெரும்பத்தூர் கால்நடை மருந்தக கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் சதன்திருமலைகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    சங்கரன்கோவில் ஒன்றிய தலைவர் லாலா சங்கரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மதி மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வி, மணலூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி, பெரும்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவசேனா நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    கால்நடை பராமரிப்பு துறை நெல்லை மண்டல இணை இயக்குநர் டாக்டர். பொன்வேல், கோட்ட உதவி இயக்குநர் டாக்டர். கலையரசி, சங்கரன்கோவில் உதவி இயக்குநர் டாக்டர் ரஹமத்துல்லா மற்றும் மருத்துவர்கள் மகிழன், சுருளிராஜ், வசந்தா, ராஜா, சசிதரன், கால்நடை ஆய்வாளர் கோபால், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முத்துமாரியப்பன், அனிதா ஆகியோர் விழா ஏற்பாடு செய்து கலந்து கொண்டனர்.

    ×