search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்து முகாம்"

    • நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
    • தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., கைத்தறி உதவி இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி புனல்வேலி கிராமத்தில் கைத்தறி துறை சார்பாக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன் னிட்டு நெசவாளர்களுக் கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், கைத்தறி உதவி இயக்குனர் வெங்க டேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து. நெசவாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி னர்.

    பின்னர் தங்கப்பாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதா வது:-

    விருதுநகர் மாவட்டத்தில் அதிக நெசவாளர்களை கொண்ட தொகுதி ராஜ பாளையம் தொகுதி தான். தமிழ்நாட்டில் அதிகளவில் காடா நெசவு செய்து கொடுக்கும் தொகுதியாக ராஜபாளையம் தொகுதி திகழ்கிறது. நெசவாளர் களுக்கு நமது முதல் அமைச் சர், மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் அமைச்சர் களான வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரனும், நிதித்துறை அமைச்சர் தங்கம்தென்னர சும், ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான நானும் எப்போதும் உறு துணையாக இருப்போம் என உறுதி கூறினார்.

    இந்நிகழ்வில் பேரூர் சேர்மன் ஜெயமுருகன், தலைமை மருத்துவர் கரு ணாகரபிரபு பேரூர் செயலா ளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×