என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனைவியை கொலை செய்த கணவர்"
- ரோஹீம் காஜீ மனைவி கோபினாவை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
- கொலை செய்த கணவனை போலீ சார் கைது செய்து வந்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புது மேட்டூர் சின்னச்சாமி செங்கல் சூளையில் கொல்கத்தா, பெலிசிடா மாவட்டம், நெலிபாரியை சேர்ந்த ரோஹீம் காஜீ (43) மற்றும் இவரது மனைவி கோபினா (24) ஆகியோர் அந்தியூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தார்கள்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ரோஹீம் காஜீ மனைவி கோபினாவை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இந்நிலையில் இவரை வட மாநில பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். மேலும் தமிழ்நாட்டிற்கு மீண்டும் செங்கல் சூளை பகுதியில் வேலை செய்ய வந்துள்ளாரா? என்றும் போலீசார் அவ்வப்போது தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள செங்கல் சூளையில் ரோஹீம் காஜீ வேலைக்கு சேர்ந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை யடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்தி ற்கு சென்று ரோஹீம் காஜியை கைது செய்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
5 ஆண்டுகளுக்கு பிறகு மனைவியை கொலை செய்த கணவனை போலீ சார் கைது செய்து வந்தது அந்தியூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- கேரளாவில் முத்தப் பிரச்சினையில் மனைவியை கத்தியால் குத்தி கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மனைவியை கொலை செய்த அவினாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவரது மனைவி தீபிகா.
இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. அவினாஷ், கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தினர் பாலக்காட்டில் வசித்து வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவினாஷ் விடுமுறையில் ஊருக்கு வந்தார். மனைவி-மகனுடன் சந்தோஷமாக அவர் பொழுதை கழித்து வந்தார். சம்பவத்தன்று காலையில் தூங்கி எழுந்த அவினாஷ், தனது மகனுக்கு முத்தம் கொடுத்தார்.
அப்போது அவரது மனைவி தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கூடாது என கணவரை கண்டித்தார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அவினாஷ், கத்தியால் மனைவி தீபிகாவை சரமாரியாக குத்தினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, தீபிகாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவினாசை கைது செய்தனர். முத்தப் பிரச்சினையில் மனைவியை கத்தியால் குத்தி கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்