search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவிகள்"

    புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான தமிழகத்தை சேர்ந்த 2 துணை ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. #PulwamaAttack #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர்(துணை ராணுவத்தினர்) மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதியின் மகன் ஜி.சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையனின் மகன் சி.சிவசந்திரன் ஆகிய 2 வீரர்கள் உயிரிழந்தனர்.



    நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமது இன்னுயிரை தியாகம் செய்த, தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவத்தினர் ஜி.சுப்ரமணியன் மற்றும் சி.சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15-2-2019 அன்று உத்தரவிட்டு, அத்தொகை உடனடியாக வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மறைந்த துணை ராணுவ வீரர்கள் ஜி.சுப்ரமணியன் மற்றும் சி.சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-2-2019 அன்று உத்தரவிட்டார்.

    பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் உயிரிழந்த ஜி.சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சி.சிவசந்திரனின் மனைவி காந்திமதிக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

    இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, அரசு தலைமைக் கொறடா எஸ்.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பி.செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, அரியலூர் மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி, பொதுத்துறை துணைச் செயலாளர் (மரபு) டி.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பலியான துணை ராணுவ வீரர் சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கு கயத்தார் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  #PulwamaAttack #EdappadiPalaniswami
    ஏழேழு ஜென்மத்துக்கும் இவர்களே கணவராக வர வேண்டும் என மனைவிகள் மரத்தை சுற்றி வரும் பண்டிகையில், இந்த மனைவிகள் எந்த ஜென்மத்துக்கும் வேண்டாம் என கணவர்கள் மரத்தை எதிர் திசையில் சுற்றி வந்துள்ளனர்.
    மும்பை:

    வட மாநிலங்களில் வத் பூர்னிமா என்ற பண்டிகளை திருமணம் ஆன பெண்களால் கொண்டாடப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்களது கணவர்கள் பூரண ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனவும், ஏழு ஜென்மங்களுக்கும் அவர்களே கணவர்களாக வர வேண்டும் என வேண்டிக்கொண்டு கோவில் மரத்தை சுற்றி வந்து அதில் கயிறு ஒன்றை கட்டுவார்கள்.

    எமனிடம் இருந்து சாவித்திரி தனது கணவர் சத்தியவானின் உயிரை போராடி பெற்ற புராணக்கதையை அடிப்படையாக கொண்டு இந்த பிராத்தனை செய்யப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ஆவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள வாலுஜ் என்ற பகுதியில் உள்ள பெண்கள் இந்த பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

    அப்பகுதியில் மனைவிகளால் பாதிக்கப்பட்டோர் அமைப்பை வைத்துள்ள ஆண்கள் சிலர், அதே நாளில் கோவிலுக்கு வந்து மரத்தை எதிர்த்திசையில் சுற்றி வந்துள்ளனர். மேலும், ‘ஏழேழு ஜென்மத்துக்கு இந்த மனைவி வந்துவிடக்கூடாது’ என்ற கோஷத்தை எழுப்பிய படி சுற்றி வந்த அவர்கள் மரத்தில் கயிறை கட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக, மனைவிகளால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர் பாரத் புலார் கூறுகையில், ‘சட்டத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை கொண்டு எங்களது மனைவிகள் எங்களை துன்புறுத்தி வருகின்றனர். ஏழு நொடிகள் கூட அவர்கள் உடன் எங்களால் வாழ முடியாத நிலையில், எப்படி ஏழு ஜென்மங்கள் வாழ முடியும்’ என தெரிவித்துள்ளார்.
    ×