search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு அனுப்பும் போராட்டம்"

    • வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற போராட்டம் நடத்தினர்.
    • பா.மக.வினர் காட்டுமன்னார்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று தாபால் நிலையம் வந்தடைந்தனர்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் ஒன்றிய, நகர பா.ம.க சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு மே மாதம் 31-ந் தேதிக்குள் நிறைவேற்றக் கோரி தமிழக முதல்-அமைச்சருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தலைவருக்கும் தபால் மூலம் 20 ஆயிரம் மனு அனுப்பும் போராட்டம் காட்டு மன்னார்கோவில் தலைமை தபால் அலுவலகத்தில் நகர செயலாளர்டாக்டர் அன்பு சோழன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஒன்றிய செயலாளர் வக்கீல் கார்த்திகேயன் கலந்து கொண்டார்.சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னாதாக பா.மக.வினர் காட்டுமன்னார்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று தாபால் நிலையம் வந்தடைந்தனர். அதன் பின்னர் தபால் நிலைய அதிகாரிகளிடம்சுமார் 20 ஆயிரம் மனுக்களை மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் முன்னிலையில் தபால் தலை ஒட்டிகொடுத்தனர்.

    • நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக அரசுக்கு 5 கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
    • நிறைவேற்ற தவறினால் அடுத்து 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் அனுப்பப்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பாக மாவட்டத் தலைவர் பாண்டியராஜ் தலைமையில் தமிழக அரசுக்கு 5 கோரிக்கைகளை வலியுறுத்த தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

    இந்தப் போராட்டத்தில் வலியுறுத்திய கோரிக்கைகள் தபால் மூலம் 327 தபால்கள் அனுப்பப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளது:-

    கிராம ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிடவும், பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு கால ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கிடவும், ஊராட்சி பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு கால ஓய்வூதியம் வழங்கிடவும், ஓய்வூதிய தொகையாக வழங்கும் பணத்தொகையாக ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சம் ஆக உயர்த்திடவும்,

    மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்களாக பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியமாக ரூ.5000 வழங்கிடவும், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலம் வரை ஊதியம் அரசு கருவூலம் மூலமாக வழங்கிட கோரியும், ஊரக வளர்ச்சித் துறையில் காலம் நேரம் கருதாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். முதல் கட்ட போராட்டமாக தபால் அனுப்பும் போராட்டமும், கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் அடுத்து 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் அனுப்பப்பட்டது.


    ×