search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனிதசங்கிலி"

    • ஜிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
    • முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்

    உடுமலை :

    ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை மத்திய பஸ் நிலையத்துக்கு எதிரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.தலைமை வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

    போராட்டத்தின் போது,ஜிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.போராட்டத்தில் ஆசிரியர்,அரசு ஊழியர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    ×