search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனவளர்ச்சி குன்றியோர்"

    • மனவளர்ச்சி குன்றியோருக்கான புதிய இல்லம் திறப்பு விழா நாளை நடக்கிறது.
    • பி.வி.எம். அறக்கட்டளை மீடியா பெடரேசன் தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் என்பவரால் தொடங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பி.வி.எம். அறக்கட்டளை சார்பில் மனவளர்ச்சி குன்றியோருக்கான புதிய இல்லம் திறப்பு விழா நாளை நடக்கிறது.

    ராமநாதபுரம் நகரில் கடந்த 2006-ம் ஆண்டு பி.வி.எம். அறக்கட்டளை தேசிய விருதாளரும், பிரஸ் மற்றும் மீடியா பெடரேசன் தேசிய தலைவருமான டாக்டர் அப்துல் ரசாக் என்பவரால் தொடங்கப்பட்டு மனவளர்ச்சி குன்றியோருக்கான மையம் பாரதி நகரில் வாடகை கட்டிடத்தில் இயங்கியது. இங்கு ஏராள மான முதியோர், மன வளர்ச்சி குன்றிய இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டு மருத்துவம், உணவு, கல்வி போன்றவை வழங்கப்பட்டது.

    தற்போது நன்கொடையா ளர்கள் உதவியுடன் ராமநாதபுரம்-திருப்புல்லாணி ஈ.சி ஆர். சாலையில் பள்ள பச்சேரி பஸ் நிறுத்தம் அருகில் மனவளர்ச்சி குன்றி யோருக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

    விழாவிற்கு பி.வி.எம்.அறக்கட்டளை நிறுவனர் அப்துல் ரசாக் தலைமை தாங்குகிறார். சித்தார் கோட்டை முஸ்லிம் முன்னாள் ஜமாத் தலைவர் அல்தாப் உசேன் வரவேற்கிறார்.

    தொடர்ந்து மலேசியா பிரபல ஆடிட்டர் அன்சாரி இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் விழாவில் மலேசியா தொழிலதிபர்க ளும், நன்கொடையாளர்க ளுமான சித்தார்கோட்டை முகமதியா பள்ளிகளின் துணைத்தலைவர் முகம்மது ஷாஜகான், மலேசியா கோபத்தா குரூப் நிறுவ னங்களின் தலைவர் பனைக் குளத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம். மலேசியா தொழிலதிபர் புதுவலசை யைச்சேர்ந்த அலிக்கான், இருமேனி கிராமத்தை சேர்ந்த மலேசிய தொழில் அதிபர் எஸ்.எம்.எஸ்.ரபிக்தீன் சகோதரர்கள், மலேசிய தூதரக ஜெனரல் கவுரவ தூதர் சென்னை சரவணக்குமார், புதுமடம் வடக்குத்தெரு பொருளாளர் சாகுல்ஹமீது, சிங்கப்பூர் தொழிலதிபர் டாக்டர் பைஜு ஜிப்ரி உள்ளிட் டோர் புதிய கட்டிடங்களை திறந்து வைக்கின்றனர்.

    முன்னதாக சித்தார் கோட்டை முகமதியா பள்ளி களின் முன்னாள் தலைவ ரும், அன்னை பாத்து முத்து ஜொகரா அறக்கட்டளை நிறுவனரும், மறைந்த தஸ்தக் கீரை நினைவு கூறும் வகையில், அறக்கட்டளை நிறுவ னர் அப்துல் ரசாக் தலைமையில் சிறப்புதுவா நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் பல்வேறு சமூக சேவையாளர்களுக்கு பாராட்டு விருதுகள், கேட யம், பதக்கம் வழங்கப்படு கிறது. இதில் ராமநாதபுரம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மாவட்ட அதிகாரி பாலசுந்தரம், முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் அகமது உசேன் ஆசிப், கீழக்கரை தாசில்தார் பழனிகுமார், திருப்புல் லாணி யூனியன் தலைவர் புல்லாணி, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன். திருப்புல்லாணி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா. பி.வி.எம். மனநல காப்பக கட்டிடத்தை கட்டிய கீழக்கரை கே.எம்.எம்.சுல்தான் சம்சூல்கபிர், என்ஜினீயர் பிரபாகரன் மற் றும் அரசியல் கட்சி பிரமுகர் கள். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், இந்து சமூக தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை காப்பக நிறுவனர் அப்துல் ரசாக், பி.வி.எம். அறக்கட்டளை தலைவர் பக்கீர் முகமது அறக்கட்டளை மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் யாசர் அரபாத், சானாஸ்கான், முகமது யாசிர், குமார், யூனுஸ்கான், மன்சூர் உள்ளிட்டவர்கள் செய்துள்ளனர்.

    • மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
    • அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    பனைக்குளம்

    அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி அறிவுரை யின்படி மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஜி.மருதுபாண்டியன் இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    முதல் கட்டமாக மண்டபம் மேற்கு ஒன்றியம் பட்டணம் காத்தான் முதல் நிலை ஊராட்சி பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் முன்னி லையில் அ.தி.மு.க கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்திட வேண்டியும், எடப்பாடி பழனிசசாமி நீண்ட ஆயுள் காலம் வாழ்ந்திட வேண்டியும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வாலாந்தரவை கிராமத்தில் உள்ள செஸ்ட் ஏஞ்சலின் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் உள்ள குழந்தை களுடன் ஒன்றிணைந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலையில் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், பாரதி நகர் மாரியப்பன், முன்னாள் அரசு வழக்கறிஞர் கருணா கரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜெய கார்த்திகேயன், இளைஞரணி துணை செயலாளர் சுமன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கோபால், பிரதிநிதி முருகேசன், சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர் அலி, முன்னாள் ஒன்றிய துணைச் செய லாளர் சண்முகவேல், ஒன்றிய மாணவரணி தலைவர் பரமகுரு, நகர் மாணவர் அணி செயலாளர் காளிதாஸ், ரோஸ் நகர் கிளைச்செயலாளர் கண்ணன், ஊராட்சி துணைத்தலைவர் வினோத், பாரதி நகர் இளைஞர் பாசறை செய லாளர் சுந்தர், பட்டணம் காத்தான் விக்கி உள் பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களுடன், ஒன்றிய செயலாளர் ஆர். ஜி.மருது பாண்டியன் உணவு சாப்பிட்டு மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் செய்திருந்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    ×