search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "retarded"

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ். சார்பில் வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சி அணிவிக்கப்பட்டது.
    • வெள்ளி கவசம் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் நினைவிட த்தில் வருகிற 30-ந் தேதி 61-வது குருபூஜை மற்றும் 116-வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.

    கடந்த ஆண்டு ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்தினர் சார்பில் தேவர் நினை விடத்தில் உள்ள தேவர் சிலைக்கு சுமார் 10½ கிலோ எடை கொண்ட வெள்ளிக் கவசம் வழங்கபட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று, அந்த வெள்ளி கவசம் தேவர் சிலைக்கு ஓ.பி.எஸ். மகன் விஜயபிரதீப் முன் னிலையில் மீண்டும் அணி விக்கப்பட்டது. மேலும் புதிதாக இந்த ஆண்டு செய்யப்பட்ட 12 கிலோ எடையுள்ள வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சியும் பூஜைகள் நடத்தி அணிவிக்கபட்டது.

    இதனையொட்டி தங்க கவசம் வரும் வரை வெள்ளி கவசம், அணிவிக்கபட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் மூக்கையா, ஒன்றிய செய லாளர்கள் கருப்புச்சட்டை முருகேசன், முத்துராம லிங்கம், வாசு, அழகு சரவ ணன், மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பரிதி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சின்னாண்டு, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சோலைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மனவளர்ச்சி குன்றியோருக்கான புதிய இல்லம் திறப்பு விழா நாளை நடக்கிறது.
    • பி.வி.எம். அறக்கட்டளை மீடியா பெடரேசன் தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் என்பவரால் தொடங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பி.வி.எம். அறக்கட்டளை சார்பில் மனவளர்ச்சி குன்றியோருக்கான புதிய இல்லம் திறப்பு விழா நாளை நடக்கிறது.

    ராமநாதபுரம் நகரில் கடந்த 2006-ம் ஆண்டு பி.வி.எம். அறக்கட்டளை தேசிய விருதாளரும், பிரஸ் மற்றும் மீடியா பெடரேசன் தேசிய தலைவருமான டாக்டர் அப்துல் ரசாக் என்பவரால் தொடங்கப்பட்டு மனவளர்ச்சி குன்றியோருக்கான மையம் பாரதி நகரில் வாடகை கட்டிடத்தில் இயங்கியது. இங்கு ஏராள மான முதியோர், மன வளர்ச்சி குன்றிய இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டு மருத்துவம், உணவு, கல்வி போன்றவை வழங்கப்பட்டது.

    தற்போது நன்கொடையா ளர்கள் உதவியுடன் ராமநாதபுரம்-திருப்புல்லாணி ஈ.சி ஆர். சாலையில் பள்ள பச்சேரி பஸ் நிறுத்தம் அருகில் மனவளர்ச்சி குன்றி யோருக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

    விழாவிற்கு பி.வி.எம்.அறக்கட்டளை நிறுவனர் அப்துல் ரசாக் தலைமை தாங்குகிறார். சித்தார் கோட்டை முஸ்லிம் முன்னாள் ஜமாத் தலைவர் அல்தாப் உசேன் வரவேற்கிறார்.

    தொடர்ந்து மலேசியா பிரபல ஆடிட்டர் அன்சாரி இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் விழாவில் மலேசியா தொழிலதிபர்க ளும், நன்கொடையாளர்க ளுமான சித்தார்கோட்டை முகமதியா பள்ளிகளின் துணைத்தலைவர் முகம்மது ஷாஜகான், மலேசியா கோபத்தா குரூப் நிறுவ னங்களின் தலைவர் பனைக் குளத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம். மலேசியா தொழிலதிபர் புதுவலசை யைச்சேர்ந்த அலிக்கான், இருமேனி கிராமத்தை சேர்ந்த மலேசிய தொழில் அதிபர் எஸ்.எம்.எஸ்.ரபிக்தீன் சகோதரர்கள், மலேசிய தூதரக ஜெனரல் கவுரவ தூதர் சென்னை சரவணக்குமார், புதுமடம் வடக்குத்தெரு பொருளாளர் சாகுல்ஹமீது, சிங்கப்பூர் தொழிலதிபர் டாக்டர் பைஜு ஜிப்ரி உள்ளிட் டோர் புதிய கட்டிடங்களை திறந்து வைக்கின்றனர்.

    முன்னதாக சித்தார் கோட்டை முகமதியா பள்ளி களின் முன்னாள் தலைவ ரும், அன்னை பாத்து முத்து ஜொகரா அறக்கட்டளை நிறுவனரும், மறைந்த தஸ்தக் கீரை நினைவு கூறும் வகையில், அறக்கட்டளை நிறுவ னர் அப்துல் ரசாக் தலைமையில் சிறப்புதுவா நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் பல்வேறு சமூக சேவையாளர்களுக்கு பாராட்டு விருதுகள், கேட யம், பதக்கம் வழங்கப்படு கிறது. இதில் ராமநாதபுரம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மாவட்ட அதிகாரி பாலசுந்தரம், முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் அகமது உசேன் ஆசிப், கீழக்கரை தாசில்தார் பழனிகுமார், திருப்புல் லாணி யூனியன் தலைவர் புல்லாணி, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன். திருப்புல்லாணி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா. பி.வி.எம். மனநல காப்பக கட்டிடத்தை கட்டிய கீழக்கரை கே.எம்.எம்.சுல்தான் சம்சூல்கபிர், என்ஜினீயர் பிரபாகரன் மற் றும் அரசியல் கட்சி பிரமுகர் கள். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், இந்து சமூக தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை காப்பக நிறுவனர் அப்துல் ரசாக், பி.வி.எம். அறக்கட்டளை தலைவர் பக்கீர் முகமது அறக்கட்டளை மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் யாசர் அரபாத், சானாஸ்கான், முகமது யாசிர், குமார், யூனுஸ்கான், மன்சூர் உள்ளிட்டவர்கள் செய்துள்ளனர்.

    ×