search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பி.எஸ். சார்பில் வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சி அணிவிப்பு
    X

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ். சார்பில் வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சி ஓ.பி.விஜயபிரதீப் முன்னிலையில் அணிவிக்கப்பட்டது.

    ஓ.பி.எஸ். சார்பில் வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சி அணிவிப்பு

    • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ். சார்பில் வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சி அணிவிக்கப்பட்டது.
    • வெள்ளி கவசம் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் நினைவிட த்தில் வருகிற 30-ந் தேதி 61-வது குருபூஜை மற்றும் 116-வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.

    கடந்த ஆண்டு ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்தினர் சார்பில் தேவர் நினை விடத்தில் உள்ள தேவர் சிலைக்கு சுமார் 10½ கிலோ எடை கொண்ட வெள்ளிக் கவசம் வழங்கபட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று, அந்த வெள்ளி கவசம் தேவர் சிலைக்கு ஓ.பி.எஸ். மகன் விஜயபிரதீப் முன் னிலையில் மீண்டும் அணி விக்கப்பட்டது. மேலும் புதிதாக இந்த ஆண்டு செய்யப்பட்ட 12 கிலோ எடையுள்ள வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சியும் பூஜைகள் நடத்தி அணிவிக்கபட்டது.

    இதனையொட்டி தங்க கவசம் வரும் வரை வெள்ளி கவசம், அணிவிக்கபட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் மூக்கையா, ஒன்றிய செய லாளர்கள் கருப்புச்சட்டை முருகேசன், முத்துராம லிங்கம், வாசு, அழகு சரவ ணன், மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பரிதி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சின்னாண்டு, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சோலைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×