search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய சுகாதார மந்திரி"

    • இந்த சூழலில் வதந்திகளையும், தேவையற்ற அச்சங்களையும் தடுக்க வேண்டும்.
    • கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

    இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காணொலி வாயிலாக இதில் பங்கேற்றனர். சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் மற்றும் வல்லுநர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் பேசிய மந்திரி மாண்டவியா கூறியதாவது:

    கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழலில் வதந்திகளையும், தேவையற்ற அச்சங்களையும் தடுக்கும் வகையில் சரியான தகவல்கள் பகிரப்படுவது அவசியம்.

    கொரோனா தொடர்பான நம்பகமான தகவல்களை மட்டும் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பகிர வேண்டும். கொரோனா சிகிச்சையில் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளையும், பங்களிப்பையும் தலைவணங்கி பாராட்டுகிறேன்.,

    நாளை நடைபெறவுள்ள கொரோனா சிகிச்சை தொடர்பான நாடு தழுவிய அளவிலான ஒத்திகை முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் ஒரு பகுதியாகவே நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சுகாதாரப் பணியாளர்களுக்கு மத்திய மந்திரி நன்றி தெரிவித்துள்ளார்.
    • அனைவருக்கும் ஆரோக்கிய திட்ட பயனாளிகளுக்கு சுகாதார அட்டை வழங்கப்படும்.

    2014-ஆம் ஆண்டு முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் நாடு முழுவதும் குறைந்துள்ளதாக இந்திய மாதிரி பதிவு அமைப்பு வெளியிட்ட புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக அளவில் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா ஒரு முக்கிய சாதனையைப் படைத்துள்ளதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராடடு தெரிவித்துள்ளார்.

    மேலும் குழந்தை இறப்பை குறைப்பதற்கு அயராது உழைத்த அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். 


    முன்னதாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் 4 வது ஆண்டு விழாவில் பயனாளிகளுடன் உரையாடிய மன்சுக் மாண்டவியா, அனைவருக்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் மத்திய அரசின் நோக்கத்தை இந்த திட்டம் வலுப்படுத்தியுள்ளது என்றார்.

    ஏழை மக்களும் சுகாதார சேவையை பெறும் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சேராத மாநிலங்களும் சேருமாறு அவர் வலியுறுத்தினார். ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கும் விரைவில் முத்திரையுடன் கூடிய அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    ×