search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுகுடிக்க அனுமதித்தவர் கைது"

    • அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக மது அருந்த அனுமதியளித்தது தெரியவந்தது.
    • மது பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    அந்தியூர்:

    சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீசார் தவிட்டுப்பாளையம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (33), தனது மீன் கடைக்கு அருகில் எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக மது அருந்த அனுமதியளித்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரது கடையின் அருகில் இருந்து மது பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    ×