search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது போதை"

    • செந்தில்குமார் மது அருந்திவிட்டு விவசாயத்திற்கு பயன்படும் மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
    • சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 35). இவருக்கு ஒரு மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் . நேற்று செந்தில்குமார் மது அருந்திவிட்டு விவசாயத்திற்கு பயன்படும் மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

    இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர் பின்பு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து இறந்து போனவரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணையை கொண்டு வருகின்றனர்.

    • இரவு பணியில் இருந்த செவிலியர் ஒருவரிடம் அப்துல் ரகுமான் என்பவர் மது போதையில் தகராறில் ஈடுபட்டார்.
    • பலத்த காயமடைந்த 2 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நீடாமங்கலம்:

    நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த செவிலியர் ஒருவரிடம் அப்துல் ரகுமான் (வயது 50) என்பவர் மது போதையில் தகராறில் ஈடுபட்டார்.இதனை மருத்துவமனை கம்பவுண்டர் சதாசிவம்(40) தட்டி கேட்டார்.

    இதில் அப்துல்ரகுமான் ஆத்திரமடைந்து பாட்டிலால் சதாசிவத்கொதை குத்தி னார். மேலும் தன்னை தானே குத்தி கொண்டார். இதில் பலத்த காயமமடைந்த 2 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சேசை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×