search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிச்சியம்"

    மதிச்சியத்தில் மைனர் பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மதிச்சியம் பகுதியில் 17 வயது சிறுமி 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அவர்கள் வீடு திரும்பியபோது சிறுமி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் அவளை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மதிச்சியம் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார். அதில், ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த சூர்யா என்ற வாலிபர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுமியையும், அவளை கடத்தியதாக வாலிபரையும் தேடி வருகின்றனர்.

    ×