search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidnapped minor girl"

    தேனி அருகே திருமணத்திற்கு மைனர் பெண்ணை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி அருகே உத்தமபாளையம் ஆனைமலை யான்பட்டி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த 17 வயது இளம்பெண் தனது தோழி வீட்டிற்கு சென்றபோது மாயமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர்பெண்ணை தேடி வந்தனர்.

    இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் போடி அருகே உள்ள சிலமலை மணியம்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த அர்ஜூனன் (வயது24) என்பவர்தான் மைனர் பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அர்ஜூனனை போலீசார் கைது செய்தனர். சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    மதிச்சியத்தில் மைனர் பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மதிச்சியம் பகுதியில் 17 வயது சிறுமி 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அவர்கள் வீடு திரும்பியபோது சிறுமி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் அவளை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மதிச்சியம் போலீசில் சிறுமியின் தாய் புகார் செய்தார். அதில், ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த சூர்யா என்ற வாலிபர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுமியையும், அவளை கடத்தியதாக வாலிபரையும் தேடி வருகின்றனர்.

    ×