search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண் குவியல்கள்"

    • மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்து வருகின்றன.
    • விழுந்து அடிபடுமோ? என்ற அச்சத்தில் சென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த கெடிலம் ஆற்றின் குறுக்கே அண்ணா மேம்பாலம் இருந்து வரு கின்றது. இதில் 24 மணி நேரமும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றது. மேலும் மிக முக்கிய பாலமாக இருந்து வருவதால் பொது மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்து வருகின்றன. இந்நிலையில் அண்ணா மேம்பாலத்தில் இரு புறமும் சாலை ஓரத்தில் மண் குவியலாக இருந்து வருகின்றது. இதன் காரணமாக சாலை ஓரத்தில் சைக்கிள், மோட்டார் சைக்கி ளில் செல்லக்கூடிய பொது மக்கள் மண் குவியலில் சிக்கிக் கொண்டு பிரேக் அடிக்கும் சமயத்தில் தவறி கீழே விழுகின்றனர்.

    இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் அபாய மும் நிலவி வருகின்றது. கடலூர் பாரதி சாலை யில் இரு புறமும் சாலை ஓரத்தில் மண் குவியல்கள் அதிகமாக இருந்து வருவதால் விபத்து ஏற்பட்டு வருகின்றது. இது சம்பந்தமாக அதி காரிகள் சாதாரண செயல் தானே என்று எண்ணா மல் ஒவ்வொரு முறையும் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடிய வர்கள் எப்போது விழுந்து அடிபடுமோ? என்ற அச்சத்தில் சென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மண் குவியலை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • விபத்து ஏற்படாமல் தடுக்க வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அடுத்த ஓச்சேரி இல் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சித்தஞ்சி சிவ காளி பீடம் அமைந்துள்ள பகுதியில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மண் குவியல்கள் மற்றும் ஏற்கனவே போடப்பட்ட தார் சாலையை தோண்டி எடுத்து சாலை ஓரம் கொட்டப் பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    மேலும் சாலை குறுகலாக உள்ளதால் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கல் அங்கு வரும்போது விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

    பலமுறை அப்பகுதி மக்கள் எடுத்துச் சொல்லியும் அவற்றை அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை மெத்தனம்காட்டுகிறது. மேலும் விபத்துகள் ஏர்படாமல் தடுக்க அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×