என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mounds of soil"
- தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்
- கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்தது
ஜோலார்பேட்டை:
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் விரைவு வண்டி நேற்று காலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றது.
இதில் தனிப்படை போலீசார் ரெயில்பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது கழிவறையின் அருகே டிராவல் பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. அதனை போலீசார் சோதனை செய்தபோது 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்த கஞ்சாவை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சாவை கடத்திய கும்பல் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்குவரத்து பாதிப்பு
- விபத்து ஏற்படாமல் தடுக்க வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அடுத்த ஓச்சேரி இல் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் சித்தஞ்சி சிவ காளி பீடம் அமைந்துள்ள பகுதியில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மண் குவியல்கள் மற்றும் ஏற்கனவே போடப்பட்ட தார் சாலையை தோண்டி எடுத்து சாலை ஓரம் கொட்டப் பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் சாலை குறுகலாக உள்ளதால் பெங்களூரில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கல் அங்கு வரும்போது விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.
பலமுறை அப்பகுதி மக்கள் எடுத்துச் சொல்லியும் அவற்றை அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை மெத்தனம்காட்டுகிறது. மேலும் விபத்துகள் ஏர்படாமல் தடுக்க அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்