search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பாதிப்புலியூர் அண்ணா மேம்பால சாலை ஓரத்தில் குவிந்துள்ள மண்
    X

    அண்ணா மேம்பால சாலை ஓரத்தில் மண் குவிந்துள்ளதை படத்தில் காணலாம்.

    திருப்பாதிப்புலியூர் அண்ணா மேம்பால சாலை ஓரத்தில் குவிந்துள்ள மண்

    • மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்து வருகின்றன.
    • விழுந்து அடிபடுமோ? என்ற அச்சத்தில் சென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த கெடிலம் ஆற்றின் குறுக்கே அண்ணா மேம்பாலம் இருந்து வரு கின்றது. இதில் 24 மணி நேரமும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றது. மேலும் மிக முக்கிய பாலமாக இருந்து வருவதால் பொது மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்து வருகின்றன. இந்நிலையில் அண்ணா மேம்பாலத்தில் இரு புறமும் சாலை ஓரத்தில் மண் குவியலாக இருந்து வருகின்றது. இதன் காரணமாக சாலை ஓரத்தில் சைக்கிள், மோட்டார் சைக்கி ளில் செல்லக்கூடிய பொது மக்கள் மண் குவியலில் சிக்கிக் கொண்டு பிரேக் அடிக்கும் சமயத்தில் தவறி கீழே விழுகின்றனர்.

    இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் அபாய மும் நிலவி வருகின்றது. கடலூர் பாரதி சாலை யில் இரு புறமும் சாலை ஓரத்தில் மண் குவியல்கள் அதிகமாக இருந்து வருவதால் விபத்து ஏற்பட்டு வருகின்றது. இது சம்பந்தமாக அதி காரிகள் சாதாரண செயல் தானே என்று எண்ணா மல் ஒவ்வொரு முறையும் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடிய வர்கள் எப்போது விழுந்து அடிபடுமோ? என்ற அச்சத்தில் சென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மண் குவியலை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×