search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் தேசம் கட்சி"

    • மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தம்பி சேவியர் தலைமை தாங்கினார்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தேரடி திடலில் தென்காசி வடக்கு மாவட்ட மக்கள் தேசம் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் தம்பி சேவியர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மூனார் முருகன், தென்காசி தெற்கு மாவட்ட மக்கள் தேச கட்சி மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, செயலாளர் ராஜாராம், ஆகியோர் முன்னிலை வகித்தார். கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட செயலாளர் சுபாஷ் வரவேற்று பேசினார்.

    தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் பரமசிவன், எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் அப்துல் நசீர், நகர் மன்ற உறுப்பினர் ஷேக் முகமது, மக்கள் தேச கட்சி தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜாராம், தேவகுமாரி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது மணிப்பூர் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் கருப்பசாமி, கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட துணைச் செயலாளர் கணேஷ், மாவட்ட பொருளாளர் சகாயம், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் டெய்சி ராணி, போஸ் பாண்டி, முத்துராஜா, கார்த்திக் விஜய், ஜான்சன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி செயலாளர் பிரின்ஸ் ரூபன் நன்றி கூறினார்.

    • மாவட்ட செயலாளர் தம்பிசேவியர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • விழாவில் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் மக்கள் தேசம் பறையர் பேரவை சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு டாக்டர் அம்பேத்கர் பிறந்த தின விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தம்பி சேவியர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மூணார் முருகன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் மாரிராஜ், மாவட்ட அமைப்பாளர் டேனியல், மாவட்ட துணைசெயலாளர் சங்கர் ஷா, விழா ஒருங்கி ணைப்பாளர் சுபாஷ், நகர செயலாளர் முத்துக்குமார், நகர தலைவர் சங்கர லிங்கம், நிர்வாகிகள் ராமர், கண்ணன், கரன், கார்த்திக் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமா னவர்கள் கலந்து கொண்டனர்.

    ×