search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிர சட்டமன்றம்"

    • அஜித் பவார் மந்திரி சபையில் இணைந்த பின் நடைபெறும் முதல் சட்டமன்ற தொடர்
    • எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறோம் என்றார் பட்னாவிஸ்

    மகாராஷ்டிர மாநில மழைக்கால சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ந்தேதி வரை மூன்று வாரங்கள் நடைபெற இருக்கிறது.

    ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளவுப்படுத்தி தனது ஆதரவாளர்களுடன் அஜித் பவார் இணைந்த பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் இதுவாகும்.

    இதுவரை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்தது. அஜித் பவார் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வந்தார். தற்போது அவர் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சியா? அல்லது ஆளுங்கட்சியா? என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும், சரத் பவார் கட்சி தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இந்த நிலையில்தான் இன்ற சட்டமன்றம் கூடுகிறது.

    இந்த மழைக்கால தொடரில் 24 மசோதாக்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதில் 10 மசோதாவிற்கு மந்திரி சபை ஒப்புதல் வழங்கிவிட்டது. 14 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இவைகள் சட்டசபையில் முன்வைக்கப்படும்.

    ஒரு மசோதா சட்டமன்ற கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஒரு மசோதா இரண்டு அவைகளின் கூட்டுக்குழுவில் நிலுவையில் உள்ளது. இதுவும் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

    24 மசோதாக்கள் தவிர, 6 திருத்தப்பட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

    சட்டசபை கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் நேற்று ஷிண்டே, பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ''தற்போது எங்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அதை தவறாக பயன்படுத்த மாட்டோம். எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும் மக்கள் நலனுக்கான அனைத்து கேள்விகள் குறித்தும் இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும்'' என பட்னாவிஸ் தெரிவித்தார்.

    சட்டமன்ற கூட்டத்திற்கு முன் அனைத்துக் கட்சிகளுக்கு தேனீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×