search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் சூப்பிரண்டு தகவல்"

    • ஹலோ சீனியர் திட்டம் தற்போது வரை நடைமுறையில் தான் உள்ளது.
    • இத்திட்டம் மாவட்டத்தில் தற்போது வரை நடை முறையில் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தனியாக வசிக்கும் முதியவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்து வந்தது.

    இதனை தடுக்க மாவட்ட காவல் துறை சார்பில் கட ந்த 2019-ம் ஆண்டு 'ஹலோ சீனியர்' என்ற திட்டம் தொடங்கப்பட்டு அதற்கென 9655888100 என்ற பிரத்யேக தொலைபேசி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம் தனியாக வசிக்கும் முதியவ ர்களை பாது காக்கவும், அவர்களுக்கு உள்ள இடையூறுகளை களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டம் மாவட்டத்தில் தற்போது வரை நடை முறையில் உள்ளது.

    இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் எவ்வித பாதுகாப்பு வசதி யும் இன்றி தனியாக வசிக்கும் முதியோர் வீடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களை அந்தந்த போலீஸ் எல்லைக்கு உட்ப ட்ட போலீஸ் நிலை யத்தில் பணி யாற்றும் போலீசார் மூலம் கண்காணி க்கப்பட்டு வருகிறது.

    வாரத்தில் 2 நாட்கள் அவர்களது வீடுகளுக்கு போலீசார் நேரடி யாக சென்று அவ ர்களிடம் நலம் விசாரித்து விட்டு அவர்க ளிடம் குறைகள் இருந்தால் கேட்டு அதனை நிவர்த்தி செய்கின்றனர்.

    தனியாக வசிக்கும் முதியவர்களின் வீடுகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த அறிவுறுத்தினோம். அதன்படி தற்போது 30 வீடுகளில் கேமிராக்கள் பொருத்தியுள்ளனர்.

    ஹலோ சீனியர் திட்டம் தற்போது வரை நடைமுறையில் தான் உள்ளது. இத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணில் அளிக்கப்படும் புகார்கள் மீதும் உடனுக்கு டன் நடவடிக்கை எடுத்தும் வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதை பொருள் நுண்ணறிவு பிரிவு இணையதள முகவரியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது
    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டில் போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்களை தயாரித்தல், பயன்படுத்துதல், கடத்துதல் போன்ற குற்றங்களை எதிர்த்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை தமிழக அரசு நடத்திவருகிறது.

    இதன் ஒருபகுதியாக அமலாக்க பணியகம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு இணையதள முகவரியில் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் www.nibcid.org/pledge என்ற இணையதள முகவரியில் தங்களின் சுய விவரங்களான பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், அஞ்சல் குறீயிடு ஆகியவற்றை பதிவு செய்து தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இணையவழியாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

    சான்றிதழ்

    உறுதிமொழி எடுத்தவுடன் தாங்கள் உறுதிமொழி எடுத்ததற்கான சான்றிதழை பதிவிறக்கம் அல்லது தங்களின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொள்ளலாம்.

    எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் உறுதிமொழி எடுத்து அச்சான்றிதழை தங்களின் சமூக வலைதளத்தில் பகிர்ந்து மற்றவர்களையும் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுக்க ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×