search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போப் பள்ளி"

    • இந்த வருடம் படித்த பள்ளியிலேயே சந்திப்பு நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது.
    • தூத்துக்குடி மற்றும் பல ஊர்களில் இருந்து மாணவர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரத்தில் அமைந்துள்ள போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில்1983-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மற்றும் 1978 முதல் 1983 -ம் ஆண்டு வரை அதே பள்ளியில் ஒன்றாக படித்த மாணவர்கள் இருப்பிடம் மற்றும் தொலைபேசி நம்பர்களை திரட்டி ஒன்றாக வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி அதன் மூலம் பல தகவல்களை பெற்று பல ஊர்களில் பிரிந்து இருக்கும் மாணவர்களை ஒன்றிணைத்து கடந்த மே மாதம் வால்பாறையில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

    அப்போது பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே இந்த வருடம் 40 -ம் ஆண்டில் படித்த பள்ளியிலேயே சந்திப்பு நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, பாண்டிச்சேரி, சேலம், கோவை, நாகப்பட்டினம், ஆத்தூர், புதுக்கோட்டை, மதுரை, வால்பாறை, சோளிங்கர், உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் சிவத்தையாபுரம், சேர்வைக்காரன் மடம், ஆறுமுக மங்கலம், குமாரபுரம் சிவஞானபுரம், சாயர்புரம், தூத்துக்குடி மற்றும் பல ஊர்களில் இருந்து மாணவர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்த சந்திப்பு நிகழ்ச்சில் சிறப்பு விருந்தினர்களாக கற்பித்த ஆசிரியர்கள் மார்ட்டின், தங்கராஜ், சாமுவேல் ராஜ், ஜேக்கப் டேவிட், ராஜ்குமார் அகதாஸ், டேவிட் சாமுவேல், ராமச்சந்திரன், விக்டர், தனசிங் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு முன்னாாள் மாணவர்களை வாழ்த்தி பேசினார். விழாவில் ஒவ்வொருவரும் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் சாம்ராஜ் நன்றி கூறினார்.

    ×