search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போபையா"

    கர்நாடக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தற்காலிக சபாநாயகர் போபையா அறிவித்தார். #KarnatakaElection #Assembly #Adjourn
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையில் இன்று உணவு இடைவேளைக்கு பிறகு அவை கூடியது. முதல் மந்திரி எடியூரப்பா உணர்ச்சிமிகு உரையை ஆற்றினார். அப்போது அவர் உயிர் உள்ளவரை விவசாயிகளுக்காக பாடுபடுவேன் என்றார்.

    தனது பேச்சை முடித்ததும், எடியூரப்பா தனது ராஜினாமா முடிவை அறிவித்தார். அப்போது சட்டசபையில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்  எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் கைகளை குலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

    இதையடுத்து, தற்காலிக சபாநாயகர் போபையா அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    அதன்பின்னர், சட்டசபையின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி, கவர்னரிடம் இருந்து வரும் அழைப்புக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தார். #KarnatakaElection #Assembly #Adjourn
    ×