search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து இடையூறாக நிற்கும் வாகனங்கள்"

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • போக்குவரத்து மிகவும் பாதிப்படைகிறது.

    கோத்தகிரி

    கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் உள்ள பாண்டியன்பார்க் பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகலான சாலை. இப்பகுதியில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லவும் இந்த பாண்டியன் பார்க் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த சாலை பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் உள்ள தேநீர் கடைகளில் தேநீர் அருந்த வருபவர்கள் சாலைகளின் அருகிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிப்படைகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே போக்குவரத்து காவலர்கள் உடனடியாக இந்தப்போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×