search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vehicles obstructing traffic"

    • விதிமுறைகளை மீறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
    • தொடர்ந்து போக்குவரத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது.

    இதையடுத்து ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    ஈரோடு சத்தி ரோடு, ஈரோடு மார்க்கெட் பகுதியில் வரும் சரக்கு வாகனங்கள் விதிமுறைகளை மீறி ஆங்காங்கே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    இதனையடுத்து ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் போலீசார் இன்று அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மார்க்கெட் பகுதி மற்றும் சத்தி ரோடுகளில் விதிமுறைகளை மீறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதம் விதித்தனர்.

    தொடர்ந்து போக்குவரத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • போக்குவரத்து மிகவும் பாதிப்படைகிறது.

    கோத்தகிரி

    கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் உள்ள பாண்டியன்பார்க் பகுதியில் உள்ள சாலை மிகவும் குறுகலான சாலை. இப்பகுதியில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லவும் இந்த பாண்டியன் பார்க் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த சாலை பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் உள்ள தேநீர் கடைகளில் தேநீர் அருந்த வருபவர்கள் சாலைகளின் அருகிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிப்படைகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே போக்குவரத்து காவலர்கள் உடனடியாக இந்தப்போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×