search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறியாளர் பணியிடை நீக்கம்"

    • பல்வேறு வளர்ச்சி பணிகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.
    • வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நீலகிரியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் 35 ஊராட்சிகள் உள்ளன. இதில் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேலூர், பர்லியார், வண்டிச்சோலை, உபதலை, பேரட்டி, எடப்பள்ளி என 6 கிராம ஊராட்சிகள் உள்ளன.

    இந்த ஊராட்சிகளில் நடைபாதை அமைத்தல், தடுப்புச்சுவர் கட்டுதல், சாலை சீரமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் மேலூர் ஊராட்சி உள்பட சில இடங்களில் வளர்ச்சி பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், வளர்ச்சி பணிகள் சரியாக கண்காணிக்கப்படவில்லை என்பதால் தரம் இல்லாமல் நடைபெற்றதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். பணியிடை நீக்கம் இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு இடங்களில் வளர்ச்சி பணிகள் தரம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தரம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை கண்காணிக்க தவறியதாக குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த சந்திரசேகர், பொறியாளர் ராஜ்குமார் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நீலகிரியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×