என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பொன்னேரி கொலை
நீங்கள் தேடியது "பொன்னேரி கொலை"
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை அடித்து கொன்று புதரில் வீசிய கணவரை போலீசார் கைது செய்தனர். #PonneriMurder
பொன்னேரி:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருள் (35). வாத்து மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு சோனியா (28), சூர்யா (25) ஆகிய 2 மனைவிகள்.
முதல் மனைவி சோனியாவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சோனியாவின் நடத்தையில் சந்தேகம் அடைத்த அருள் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
நேற்று மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அருள் சோனியாவை கழுத்தை நெறித்தும், அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
அதன்பின்னர் மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருந்தார். பின்னர் சாக்குப்பையில் சோனியாவின் உடலை வைத்து மூட்டையாக கட்டி அருகில் உள்ள ஏரிப்பகுதிக்கு கொண்டு சென்றார்.
அங்குள்ள புதர் பகுதியில் உடலை வீசிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். குழந்தைகள் இருவரும் மாலையில் அம்மா எங்கே? என்று அருளிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அடித்து கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து குழந்தைகள் 2-வது மனைவி சூர்யாவிடம் அம்மாவை அப்பா கொன்று விட்டார் என்று கூறியதை அடுத்து சோனியா கொலை செய்யப்பட்ட தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பொன்னேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். வீட்டில் இருந்த அருளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும் பிணத்தை முட்புதரில் வீசிய தகவலையும் தெரிவித்தார்.
இதையடுத்து அருளை போலீசார் சோனியாவின் உடலை வீசிய ஏரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் சோனியா பிணமாக இருந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அருளை கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர். #PonneriMurder
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருள் (35). வாத்து மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு சோனியா (28), சூர்யா (25) ஆகிய 2 மனைவிகள்.
முதல் மனைவி சோனியாவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சோனியாவின் நடத்தையில் சந்தேகம் அடைத்த அருள் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
நேற்று மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அருள் சோனியாவை கழுத்தை நெறித்தும், அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
அதன்பின்னர் மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருந்தார். பின்னர் சாக்குப்பையில் சோனியாவின் உடலை வைத்து மூட்டையாக கட்டி அருகில் உள்ள ஏரிப்பகுதிக்கு கொண்டு சென்றார்.
அங்குள்ள புதர் பகுதியில் உடலை வீசிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். குழந்தைகள் இருவரும் மாலையில் அம்மா எங்கே? என்று அருளிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அடித்து கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து குழந்தைகள் 2-வது மனைவி சூர்யாவிடம் அம்மாவை அப்பா கொன்று விட்டார் என்று கூறியதை அடுத்து சோனியா கொலை செய்யப்பட்ட தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பொன்னேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். வீட்டில் இருந்த அருளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும் பிணத்தை முட்புதரில் வீசிய தகவலையும் தெரிவித்தார்.
இதையடுத்து அருளை போலீசார் சோனியாவின் உடலை வீசிய ஏரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் சோனியா பிணமாக இருந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அருளை கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர். #PonneriMurder
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X