search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரி அருகே மனைவியை அடித்து கொன்று புதரில் வீசிய கணவர்
    X

    பொன்னேரி அருகே மனைவியை அடித்து கொன்று புதரில் வீசிய கணவர்

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை அடித்து கொன்று புதரில் வீசிய கணவரை போலீசார் கைது செய்தனர். #PonneriMurder
    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த காவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருள் (35). வாத்து மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு சோனியா (28), சூர்யா (25) ஆகிய 2 மனைவிகள்.

    முதல் மனைவி சோனியாவுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். சோனியாவின் நடத்தையில் சந்தேகம் அடைத்த அருள் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    நேற்று மாலை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த அருள் சோனியாவை கழுத்தை நெறித்தும், அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.

    அதன்பின்னர் மனைவியின் உடலை யாருக்கும் தெரியாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருந்தார். பின்னர் சாக்குப்பையில் சோனியாவின் உடலை வைத்து மூட்டையாக கட்டி அருகில் உள்ள ஏரிப்பகுதிக்கு கொண்டு சென்றார்.

    அங்குள்ள புதர் பகுதியில் உடலை வீசிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். குழந்தைகள் இருவரும் மாலையில் அம்மா எங்கே? என்று அருளிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அடித்து கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து குழந்தைகள் 2-வது மனைவி சூர்யாவிடம் அம்மாவை அப்பா கொன்று விட்டார் என்று கூறியதை அடுத்து சோனியா கொலை செய்யப்பட்ட தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து பொன்னேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். வீட்டில் இருந்த அருளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும் பிணத்தை முட்புதரில் வீசிய தகவலையும் தெரிவித்தார்.

    இதையடுத்து அருளை போலீசார் சோனியாவின் உடலை வீசிய ஏரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் சோனியா பிணமாக இருந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அருளை கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தினர். #PonneriMurder
    Next Story
    ×