search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சிகள்"

    • அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகளில் வார்டு சபை கூட்டம் நடந்தது.
    • சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அலங்காநல்லூர்

    உள்ளாட்சி தினத்தையொட்டி அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் வார்டு சபை கூட்டம் நடந்தது. இதில் சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். சம்பந்தப்பட்ட துறையி னரை அழைத்து உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார்.

    அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி தலைமை தாங்கினார். துணை தலைவர் சுவாமி நாதன், செயல் அலுவலர் ஜீலான் பானு, செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர் ரகுபதி, முன்னிலை வகித்தனர்.

    இதில் கவுன்சிலர்கள், வட்டார மருத்துவர் வளர்மதி, குழந்தைகள் திட்ட அலுவலர் உஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்தனர்.

    இதேபோன்று பாலமேடு பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகளிலும் வார்டு சபை கூட்டம் நடந்தது. இதிலும் வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    தி.மு.க. வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டிய ராஜன், துணை தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் தேவி, நகர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

    குடிநீர் விநியோகம், குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிடம் கட்டுவது, விதி மீறிய கட்டிடங்கள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இந்த கூட்டங்களில் எடுத்துரைத்து நிவாரணம் பெறப்பட்டது.

    அச்சம்பட்டி ஊராட்சி யில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுதா முருகன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா முன்னிலையில் ஊராட்சி செயலர் முருகேசுவரி தீர்மானங்களை வாசித்தார்.

    மாணிக்கம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா பாலமுருகன் தலைமையில் துணை தலைவர் ராஜேஷ் முன்னிலையில் ஊராட்சி செயலர் பெரிச்சி தீர்மானங்களை வாசித்தார்.

    இதேபோன்று அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 37 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன.

    • அவசியமான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டியுள்ளது.
    • நிர்வாக தடுமாற்றத்தை சரி செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 15, ஈரோடு மாவட்டத்தில், 42 என 57 பேரூராட்சிகள் உள்ளன. இரு மாவட்ட பேரூராட்சிகளுக்கும் சேர்த்து ஈரோடு மாவட்டத்தில் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது.எல்லைக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் அவசியமான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டியுள்ளது.

    இப்பணிகளை பேரூராட்சி பொதுநிதியில் இருந்தே மேற்கொள்ள வேண்டிய நிலையில், வெறும் 10 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மட்டுமே நிதியை செலவழிக்கும் அதிகாரம், பேரூராட்சி செயல் அலுவலருக்கு உள்ளது. அதற்கு மேல் செலவிடப்படும் தொகைக்கு, உதவி இயக்குனரிடம் ஒப்புதல் பெற்று அவரிடம் தான் பெற வேண்டும். ஆனால் ஈரோடு மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் பணியிடம், 3 மாதங்களாக காலியாகவே உள்ளது. இதனால் பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

    பேரூராட்சி நிர்வாகத்தினர் சிலர் கூறியதாவது:-

    உதிரி பாகங்களின் விலையேற்றம், ஜி.எஸ்.டி., பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால், கால்வாய் அடைப்பை சரி செய்ய பொக்லைன் பயன்படுத்துவது, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய, மின் பராமரிப்பு பணி மேற்கொள்ள உதிரிபாகம் வாங்குவதற்கு கூட, சர்வ சாதாணமாக 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.அதிகாரிகள் மீதுள்ள நம்பிக்கையால், சிலர் கடன் அடிப்படையில் உதிரி பாகங்கள் தருகின்றனர்.

    ஆனால் நிர்வாக அனுமதி கிடைக்காததால், வழங்க வேண்டிய தொகையை வழங்க முடியாமல், தர்மசங்கட நிலைக்கு ஆளாகியுள்ளோம்.அந்த கடன் சுமை எங்கள் தலையில் உள்ளது. நிர்வாக ஒப்புதல் கிடைப்பதில் உள்ள தாமதத்தை காரணங்காட்டி, அடிப்படை வசதிகளை செய்யாமல் இருந்தால், மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடுகிறது. எனவே உதவி இயக்குனர் பணியிடம் உடனடியாக நிரப்பி, நிர்வாக தடுமாற்றத்தை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×