search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சி மன்ற கூட்டம்"

    • பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.
    • அடிப்படை வசதிகள், வளர்ச்சிபணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூ ராட்சி மன்ற கூட்டம், தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.

    இதில் செயல்அலுவலர் மனோகரன், துணை தலைவர் அப்துல் கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் அப்துல் ரஹ்மான், கிருஷ்ணன், ஸ்ரீதர், மணி வண்ணன், லிங்கோஜிராவ், ஜெயந்த், உட்பட 18-வார்டுகவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 18-வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வளர்ச்சிபணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வக்கீல் க.சுகுமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது
    • தமிழக அரசின் சமுதாய நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வக்கீல் க.சுகுமார் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ச.கலாதரன் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில், தமிழக அரசின் சமுதாய நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27.15 லட்சம் மதிப்பில் 537 எல்.இ.டி. பல்புகள் 15 வார்டுகளில் பொருத்துவது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் டி.கண்ணதாசன், ப.சோ.முனுசாமி, க.கா.சதிஷ், சந்தானலட்சுமி குணபூபதி, சுபாஷிணி ரவி, பிரபாவதி ஷேஷாத்திரி, கவுசல்யா தினேஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில், இளநிலை உதவியாளர் யுவராஜ் நன்றி கூறினார்.

    • தேன்கனிக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
    • ராஜகால்வையை தூர் வாருவது உள்ளிட்ட பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், துணைத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பேரூராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பில் பழுதடைந்துள்ள 486 எல்இடி விளக்குகளை மாற்றம் செய்வது, ரூ. 60 லட்சம் மதிப்பில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 9,11,12 வார்டுகளில் பேவர் பிளாக் சாலை அமைப்பது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் குப்பையை தரம் பிரிக்கும் கூடம் அமைத்தல், தேவராஜன் ஏரிலிருந்து உபரிநீர் செல்லும் ராஜகால்வையை தூர் வாருவது உள்ளிட்ட பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து குடிநீர் விநியோகம், சுகாதாரப் பணிகள் மேற்கொள்வது குறித்து விவாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • பொத்தனூர் பேரூராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தெருவிளக்குகள் பராமரித்தல், சாலைகள் பராமரித்தல், குடிநீர் வினியோகம் சீராக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பரசன் முன்னிலை வகித்தார் .பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தெருவிளக்குகள் பராமரித்தல், சாலைகள் பராமரித்தல், குடிநீர் வினியோகம் சீராக வழங்குதல் ,பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் இருக்க கொசு ஒழிப்பு மருந்து அடித்தல், பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .கூட்டத்தில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்பரவு மேற்பார்வையாளர் குணசேகரன், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×