என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொத்தனூர் பேரூராட்சி மன்ற கூட்டம்
    X

    கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம். 

    பொத்தனூர் பேரூராட்சி மன்ற கூட்டம்

    • பொத்தனூர் பேரூராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தெருவிளக்குகள் பராமரித்தல், சாலைகள் பராமரித்தல், குடிநீர் வினியோகம் சீராக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பரசன் முன்னிலை வகித்தார் .பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தெருவிளக்குகள் பராமரித்தல், சாலைகள் பராமரித்தல், குடிநீர் வினியோகம் சீராக வழங்குதல் ,பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் இருக்க கொசு ஒழிப்பு மருந்து அடித்தல், பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .கூட்டத்தில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்பரவு மேற்பார்வையாளர் குணசேகரன், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×