search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரன்"

    • ஆத்திரமடைந்த சூர்யா வீட்டில் இருந்த விளக்கை எடுத்து பெரம்பாயியை தாக்கினார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள அம்மாக்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி பெரம்பாயி (வயது 78). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இவரது பேரன் சூர்யா (25) என்பவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சூர்யா வீட்டில் இருந்த விளக்கை எடுத்து பெரம்பாயியை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த பெரம்பாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெரம்பாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாட்டி வீட்டிற்கு சென்று தகராறு செய்வது வழக்கம்.
    • கொலை செய்யப்பட்ட தங்க பழத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

    நாகர்கோவில் :

    கருங்கல் அருகே மங்கலக்குன்று பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி தங்கப்பழம் (வயது 78).

    இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார்கள். 2-வது மகள் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் சஜின்( 25 ). இவர் அடிக்கடி அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று தகராறு செய்வது வழக்கம்.

    அவ்வப்போது வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சூறையாடி வந்தார். இந்த நிலையில் இன்று காலை சஜின் பக்கத்தில் உள்ள பாட்டி தங்கப்பழம் வீட்டிற்கு சென்றார்.அங்கு மீண்டும் பாட்டியிடம் தகராறில் ஈடுபட்டார். அவரை பாட்டி கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த சஜின், வீட்டில் இருந்த ஓடு மற்றும் மரக்கட்டையால் பாட்டி தங்க பழத்தை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த தங்கபழம் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் தங்க பழம் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாப மாக இறந்தார்.

    இது குறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். பிணமாக கிடந்த தங்க பழத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சஜினை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.. விசாரணையில் சஜின் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் கொலை செய்யப்பட்ட தங்க பழத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டு உள்ளனர்.பாட்டியை பேரன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×